கல்முனை அம்பாரை விபத்தில் 56 வயதான ஆணொருவரும் 45 வயதான பெண்ணொருவருமே பலியாகியுள்ளனர்.
சம்மாந்துறையிலிருந்து அம்பாறைக்குப் பயணித்த டிப்பர் வாகனமும் எதிர்த்திசையில் பயணித்த வேனும் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
சம்பவத்தில் வேனின் சாரதி, அவரது மனைவி மற்றும் 12 வயதான பிள்ளையும் காயமடைந்துள்ளனர்.
பின்னர், சிகிச்சை பலனின்றி தம்பதியினர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் அம்பாறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
விபத்துடன் தொடர்புடைய டிப்பர் வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment