July 27, 20
மத்திய, ஊவா தவிர்ந்த ஏனைய 7 மாகாணங்களினதும் தேர்தலை எதிர்வரும் ஜனவரி மாதம் நடாத்துவதற்கான சாத்தியப்பாடுகள் உள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்று (26) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது இதனைக் கூறியுள்ளார்.
மாகாண சபைத் தேர்தலை புதிய தேர்தல் முறைமையின் கீழ் நடாத்துவதா? அல்லது பழைய முறைமையில் நடாத்துவதா என்பது குறித்து தீர்மானிப்பதற்கு எதிர்வரும் புதன்கிழமை (01) மீண்டும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்டுமாறும் பிரதமர் அறிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment