Saturday, July 28, 2018

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் 65 ஆயிரத்திற்கும் அதிகமான வாகனங்கள்

28.07.2018

இந்த மாதத்தின் வார இறுதியில் உள்ள 3 நாட்கள் விடுமுறை காரணமாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பாரிய அளவு வாகனங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று மாத்திரம் தெற்கு அதிவேக நெஞ்சாலையில் 65 ஆயிரத்திற்கும் அதிகமான வாகனங்கள் பயணித்துள்ளதாக அதிவேக வீதியின் பராமரிப்பு இயக்குனர் எஸ்.ஓபநாயக்க தெரிவித்துள்ளார்.

பொதுவாக அந்த வீதியில் 55 ஆயிரம் வாகனங்கள் தினசரி பயணிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அந்த வீதிகளில் இடம்பெறும் விபத்துக்களை குறைப்பதற்கான வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.


0 comments:

Post a Comment