Monday, July 30, 2018

"மருத்துவர்கள் தங்களது மூளையை, பரிசோதனை செய்ய வேண்டும்"

July 30, 2018 

சிங்கப்பூர் - இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை எதிர்க்கும் மருத்துவர்களுக்கு மூளை சரியில்லை என அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கூறுகையில்,

இலங்கை - சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை எதிர்க்கும் மருத்துவர்கள் தங்களது மூளையை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

அவ்வாறு பரிசோதனை செய்து கொள்வதே மிகவும் சிறந்ததாக இருக்கும். இந்த வர்த்தக உடன்படிக்கையினால் இலங்கை மருத்துவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படப் போவதில்லை.

விபரங்களை அறிந்து கொள்ளாது மருத்துவர்கள் இந்த உடன்படிக்கையை எதிர்த்து வருகின்றனர். சிங்கப்பூரை சேர்ந்த மருத்துவர் ஒருவரின் மாதாந்த சம்பளம் 25 இலட்சம் ரூபாவாகும்.

இவ்வாறான ஓர் நிலையில் அவர்கள் இலங்கையில் வந்து சேவையாற்றுவதற்கு அவர்களின் மூளையில் கோளாறு கிடையாது.

தர்க்க ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத விடயங்களின் அடிப்படையில் மருத்துவர்கள் இந்த உடன்படிக்கைக்கு எதிராக போராட்டம் நடத்தி வருவதாக அமைச்சர் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

Jaffna Muslim  

0 comments:

Post a Comment