July 27, 2018
யெமனிலுள்ள ஹூதி கிளர்ச்சியாளர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி சர்வதேச விமான நிலையத்தின் மீது ஆளில்லாத சிறிய ரக விமானம் ஒன்றைப் பயன்படுத்தி தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் ஏற்பட்டுள்ள சேதங்கள் தொடர்பில் இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லையென கூறப்படுகின்றது.
இருப்பினும், விமான நிலையத்தின் இரு மோட்டார் வாகனங்கள் விபத்துக்குள்ளானதாகவும், நிமான நிலைய சேவைகள் எந்தவித தடையும் இன்றி செயற்பட்டு வருவதாகவும் அபுதாபி சர்வதேச விமான நிலைய டுவிட்டர் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
இச்சம்பவம் தொடர்பில் ஐக்கிய அரபு அமீரகமும் இதுவரையில் எந்தவித உத்தியோகபுர்வ அறிவித்தலையும் விடுக்கவில்லையெனவும் குறிப்பிடப்படுகின்றது.
0 comments:
Post a Comment