Tuesday, July 31, 2018

விஜய் ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட தளபதி - "சர்கார்" இல் சம்பவம்..

31.07.2018

ரசிகர்களின் அதீத எதிர்பார்ப்பிற்கு மத்தியில், பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மீண்டும் "சர்கார்" படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் 'தளபதி' விஜய்.

தமிழ்நாட்டில் அரசியல் குழப்பநிலை காணப்படும் தற்போதைய நிலையில், அரசியல் சார்ந்த ஒரு திரைக்கதையாக உருவாக்கப்பட்டிருக்கும் 'சர்கார்" திரைப்படத்தில் விஜய் நடிப்பது எல்லோரிடத்திலும் ஒருவித எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. ஏனெனில், எதிர்காலத்தில் அரசியலுக்கு வரும் ஆசை 'தளபதி' விஜய்க்கும் உள்ளதன் காரணத்தினால் "சர்கார்" படத்தின் வருகை தமிழக அரசியல் வட்டத்திலும் கவனிப்பைப் பெறுவதற்குத் தவறவில்லை.

தற்போது "சர்கார்" படத்தின் காட்சிகள் சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படமாக்கப்பட்டு வருகின்றன. இந்தப் படப்பிடிப்பு பற்றி அறிந்துகொண்ட அப்பகுதியிலுள்ள விஜய் ரசிகர்கள், படப்பிடிப்பு தளத்துக்கு படையாக வந்ததுடன் 'தளபதி' விஜய்யை சூழ்ந்து நின்று மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்கோஷமிட்டு தமது பேரன்பை வெளிப்படுத்தியுள்ளனர். இவ்வாறு தனது ரசிகர்கள் வெளிக்காட்டிய அன்பினால் மனம் நெகிழ்ந்து போயுள்ளாராம் தளபதி.

0 comments:

Post a Comment