14 JULY 2018
கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்காக பயன்படுத்தப்பட்ட வாக்களிப்பு முறைமை, மாகாண சபைத் தேர்தலுக்கு ஒருபோதும் பொறுந்தாது என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போது எல்லை நிர்ணயம் மேற்கொண்டுள்ளமையும் சிக்கலான நிலைமையில் உள்ளது.
மாகாண சபைகள் அமைச்சர் ஒவ்வொரு விடயங்களைக் கூறுகிறார்.
அவர் கூறுவது போல மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாது.
எவ்வாறிருப்பினும், அவர் கூறுவதுபோல இந்த ஆண்டு முடிவடைவதற்குள் தேர்தலை நடத்துமாறு மாகாண சபைகள் அமைச்சருக்கு தாம் சவால் விடுப்பதாகவும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment