13 JULY 2018
பதுளை - ஹல்துமுல்லை – வங்கெடிகல மலையில் திடீரென ஏற்பட்ட காட்டுத் தீக்கு மத்தியில் சிக்குண்டிருந்த 10 பேரும் மீட்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் பாதுகாப்பான முறையில் மீட்கப்பட்டதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அவர்கள் இன்று குறித்த மலை பகுதியை பார்வையிட சென்ற நிலையில் இவ்வாறு காட்டுத் தீக்கு மத்தியில் சிக்குண்டனர்.
அவர்களை, மீட்பதற்காக தியத்தலாவ இராணுவ முகாமில் இருந்து சில இராணுவ வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் பதுளை அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்திருந்தது.
0 comments:
Post a Comment