Sunday, July 15, 2018

ஜனாதிபதியுடன் சந்திப்பு

, 15 JULY 2018

இந்த மாத இறுதியில் ஜனாதிபதியுடன் சந்திப்பு ஒன்றை நடத்த திட்டமிட்டிருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எமது செய்தி சேவைக்கு இதனைத் தெரிவித்துள்ளார்.

தற்போது இத்தாலிக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாடு திரும்பியப் பின்னர் இந்த சந்திப்பு இடம்பெறும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கில் இடம்பெறுகின்ற வெளிமாவட்டங்களைச் சேர்ந்த மக்களது திட்டமிட்ட குடியேற்றங்களை தடுப்பது, அரசியல் தீர்வு உள்ளிட்ட விடயங்கள் குறித்து இதன்போது பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.

அத்துடன் மாகாண சபைத் தேர்தல் தொடர்பிலும் பேசப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் தொடர்ச்சியாக தாங்கள் ஜனாதிபதியை சந்தித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment