Wednesday, July 18, 2018

பிள்ளையானின் விளக்கமறியல் நீடிப்பு

, 18 JULY 2018

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் விளக்கமறியல் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

2005ம் ஆண்டு டிசம்பர் 25ம் திகதி மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் நத்தார் ஆராதனையில் ஈடுபட்டிருந்த மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பாக பிள்ளையான் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மாவட்ட மேல் நீதிமன்றில் அவரது வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது இந்த மாதம் 31ம் திகதி வரையில் அவரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

Hirunews

0 comments:

Post a Comment