July 13, 2018
மரண தண்டனையை மீண்டும் கொண்டு வருவதற்கு காரணம் அண்மையில் அநுராதபுரம் பிரதேசத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவமே என்று நிலையான அபிவிருத்தி, வனவிலங்கு மற்றும் பிராந்திய அபிவிருத்தி பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும கூறினார்.
இன்று கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனைக் கூறினார்.
அண்மையில் தெரண செய்தியில் ஔிபரப்பான அநுராதபுரம் பிரதேசத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவமே மிகவும் மரண தண்டனையை மீண்டும் கொண்டு வருவதற்கான அண்மைய சம்பவம் என்றும் தூக்குமரம் போகம்பரையில் மாத்திரமன்றி அனைத்து மாவட்டங்களிலும் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
போதைப் பொருள் வர்த்தகர்கள் முழு நாட்டையும் தமது ஆதிக்கத்துக்குள் கொண்டு வந்துள்ளதாகவும் தூக்குமரம் கட்டாயமாக இருக்க வேண்டும் என்றும் பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும கூறினார்.
தெரண
0 comments:
Post a Comment