Monday, December 31, 2018

புத்தரின் சிலைகளை பொருத்தமான, இடங்களில் மாத்திரமே வைக்க வேண்டும்" - கலகம தம்மரங்சி தேரர்

"

, December 31, 2018 

புத்தரின் சிலைகளை பொருத்தமான இடங்களில் மாத்திரமே வைக்கவேண்டும். கண்ட இடங்களில் வைப்பது புத்த பெருமானுக்கு செய்யும் அகௌரவமாகும். அத்துடன் மாவனெல்லை சம்பவத்துக்கு பின்னணியில் குறுகிய அரசியல் நோக்கம் கொண்டவர்கள் இருக்கலாம். அதனால் சிங்கள முஸ்லிம் மக்கள் முரண்பட்டுக்கொள்ளாமல் சிந்தித்து செயற்படவேண்டும் என கலகம தம்மரங்சி தேரர் தெரிவித்தார்.

சோசலிச மக்கள் முன்னணி இன்று -31- கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

திகன சம்பவத்தின் பின்னணியில் அரசியல் வாதிகளே இருந்துள்ளதாக நாமல் குமாரவின் வாக்கு மூலங்கள் மூலம் தெரியவந்துள்ளன. அதேபோன்று மாவனெல்லை சம்பவமும் இருந்திருக்கலாம். நாட்டில் இனவாத சம்பவங்களை அரங்கேற்றி அதனை கூட்டு எதிரணி மீது குற்றம் சுமத்தும் நடவடிக்கையே கடந்த காலங்களில் இடம்பெற்றன.

தற்போதும் அரசியல் பின்னணியாக இதனை மேற்கொண்டு எதிர்க்கட்சியினரை இனவாதிகள்போல் காட்டவே சிலர் இதனை செய்திருக்கலாம். அதனால் சிங்கள முஸ்லிம் மக்கள் இவ்வாறான சம்பவங்கள் மூலம் ஆத்திரம் கொள்ளாமல் நிதானமாக செயற்படவேண்டும் என்றார்.

நன்றி
(எம்.ஆர்.எம்.வஸீம்)

:

0 comments:

Post a Comment