08.09.2018
இந்தமுறை ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் குழு ஒன்று செல்லவுள்ளது.
கூட்டமைப்பின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் இந்த தகவலை வழங்கினார்.
இது தொடர்பில் வரும் 14 திகதி அளவில் கூட்டமைப்பு தீர்மானிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் திங்கட் கிழமை ஜெனீவாவில் மனித உரிமைகள் பேரவையின் அமர்வு இடம்பெறவுள்ளது.
இந்த முறை இலங்கை தொடர்பான இரண்டு அறிக்கைகள் மாநாட்டில் முன்வைக்கப்படவுள்ளன.
அதேநேரம் அரச சார்பற்ற அமைப்புகளின் 4 உபகுழு கூட்டங்களிலும் இலங்கை விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்படவுள்ளன.
இதேவேளை, எதிர்வரும் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் இலங்கை அரசாங்கத்தில் இருந்து விசேட பிரதிநிதிகள் யாரும் செல்ல மாட்டார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.
வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மஹெசினி கொலன்னே இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கத்தின் சார்பில் ஜெனீவாவில் உள்ள இலங்கையின் வதிவிடப்பிரதிநிதி அப்துல் அசீஸ் கலந்து கொள்வார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment