Thursday, December 27, 2018

மாவனல்லை சம்பவம் ; 7 பேர் கைது இருவரை தேடி வலைவீச்சு

  December 27, 2018

மாவனல்லை சம்பவம் தொடர்பில் பொலிஸார் இதுவரை 7 பேர் கைது செய்துள்ளதாகவும்  இருவரை தேடிவருவதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவன் குனசேகர குறிப்பிட்டார்.

ஏற்கனவே கைது செய்யப்பட்ட (முஸ்லிம்) நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து மேலும் ஆறு பேரை கைது செய்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

கைது செய்யப்பட்ட அனைவரும் எதிர்வரும் 2 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கூறுய அவர் குறித்த சம்பவம் தொடர்பில் சி ஐ டி விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

0 comments:

Post a Comment