08.09.2018
மருத்துவர்களை இலக்காக கொண்டு சுகாதார அமைச்சின் விசாரணைப்பிரிவு செயற்படும் முறை தொடர்பில் தமது எதிர்ப்பை தெரிவிப்பதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அநாமதேய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சுகாதார அமைச்சின் விசாரணைப் பிரிவினால் அரசியல்வாதிகளுக்கு எதிரான மருத்துவர்கள் வேட்டையாடப்படுவதாக அந்த சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
அநாமதேய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அனுராதபுர மருத்துவமனையின் பணிப்பாளருக்கு எதிராக விசாரணைகளை மேற்கொள்வதற்காக சுகாதார அமைச்சின் குழுவொன்று நேற்றைய தினம் அனுராதபுரம் மருத்துவமனைக்கு வருகை தந்திருந்தமை அதன் அடிப்படையிலாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அதன் உதவி செயலாளர் , எதிர்வரும் 17ம் திகதி கூடவுள்ள மத்திய செயற்குழு கூட்டத்தின் போது இது தொடர்பில் தீர்மானமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்தார்.
0 comments:
Post a Comment