Wednesday, August 29, 2018

பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்வதற்கான போட்டிப் பரீட்சை 2 ஆம் திகதி

August 29, 2018

பட்டதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்வதற்கான போட்டிப் பரீட்சை எதிர்வரும் 2 ஆம் திகதி நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

கொழும்பு நகரில் 6 பரீட்சை மத்திய நிலையங்களில் இப்பரீட்சை நடைபெறவுள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டிலுள்ள தேசிய பாடசாலைகளில் நிலவும் சிங்களம் மற்றும் தமிழ் மொழி மூல ஆசிரியர் குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் இந்த போட்டிப் பரீட்சை நடாத்தப்படுகின்றது.

இந்தப் பரீட்சை ஏற்கனவே கடந்த 27 ஆம் திகதி நடைபெற ஏற்பாடாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment