08. 09.2018
மக்கள் பலம் எதிர்ப்பு பேரணியை ஏனைய மாவட்டங்களிலும் முன்னெடுப்பதற்கு மகிந்த அணியினரின் கட்சித் தலைவர் கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க எமது செய்திச் சேவைக்கு இதனை தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ தலைமையில் எதிர்வரும் செவ்வாய் கிழமை இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பை நோக்கிய மக்கள் பலம் எதிர்ப்பு பேரணி கடந்த 5ம் திகதி நடத்தப்பட்டது.
இதன் ஒழுங்கமைப்புகள் உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் இந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hirunews
0 comments:
Post a Comment