Saturday, September 8, 2018

அடுத்த அரசாங்கத்தின் தலைவர் பிரதமர் – ஜனாதிபதி

September 8, 2018

தேர்தலின் பின்னர் அமையப்போகும் புதிய அரசாங்கத்தின் தலைவர் ஜனாதிபதியல்ல எனவும், அவர் பிரதமரே எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

19 ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியின் பெரும்பாலான அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளன. இதனால், அடுத்த அரசாங்கத்தின் தலைவரை தெரிவு செய்யும் போது ஊழல், மோசடி இல்லாத ஒருவரை தெரிவு செய்வதற்கு மக்கள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

நிவித்திகலையில் இன்று (08) நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

0 comments:

Post a Comment