Saturday, September 8, 2018

அரச பணியாளர்கள் சிலருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை

08 SEP 2018

அரசாங்கத்தில் இருந்து வெளியேறிய சுதந்திரக் கட்சியை சேர்ந்த 16 பேர் கொண்ட குழுவின் சிலர், அமைச்சர்களுக்கான உத்தியோகபூர்வ இல்லத்தை மீண்டும் அரசாங்த்துக்கு ஒப்படைக்கவில்லை.

இதனால் அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அரச நிர்வாக அமைச்சு இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.

உத்தியோகபூர்வ இல்லங்களை கையளிக்காதவர்கள் மத்தியில் அரச பணியாளர்களும் இருப்பதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அதேநேரம், உத்தியோகபூர்வ இல்லங்களை கையளிக்காத அரச பணியாளர்கள் சிலருக்கு எதிராகவும் வழக்கு தாக்கல் செய்ய அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment