Sunday, September 9, 2018

அரசாங்கத்துக்கு விளங்கும் வகையில் நடவடிக்கை – JO

September 9, 2018

கூட்டு எதிர்க் கட்சி கொழும்பில் ஆரம்பித்த அரசாங்கத்துக்கு எதிரான மக்கள் சக்தி நடவடிக்கையை மாவட்ட ரீதியில் முன்னெடுக்க கூட்டு எதிரணியின் இளம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.

இதன் அடிப்படையில், அடுத்த மக்கள் சக்தி நடவடிக்கை கண்டியில் முன்னெடுக்கப்படவுள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்துக்கும் சென்று மக்களை அறிவுறுத்தி, அரசாங்கத்தை வெளியேறுமாறு அழுத்தம் கொடுக்கவுள்ளதாகவும் இந்த இளம் எம்.பி.க்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அன்று கொழும்பில் நடைபெற்ற மக்கள் சக்தி ஆர்ப்பாட்டத்தில் லட்சக்கணக்கான மக்கள் வெளிப்படுத்திய செய்தியை அரசாங்கம் விளங்கிக் கொள்ளாது போனால், இந்தப் போராட்டத்தை இடைவிடாது முன்னெடுக்கப் போவதாகவும் இளம் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் சார்பில் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment