Friday, September 7, 2018

மட்டக்களப்பு மாவட்டத்தில் பூரண நிர்வாக முடக்கல் போராட்டம்

07.09.2018

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்றையதினம் பூரண நிர்வாக முடக்கல் போராட்டம் இடம்பெறுகிறது.

மட்டக்களப்பு – பதுளை வீதி பெரிய புல்லுமலையில் அமைக்கப்பட்டு வருகின்ற போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் தயாரிப்புத் தொழிற்சாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த போராட்டம் நடத்தப்படுகிறது.

தமிழ் உணர்வாளர்களால் இந்த நிர்வாக முடக்கல் போராட்டத்துக்கான அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு தமிழ் அரசியல்வாதிகள், பொது அமைப்புக்கள் மற்றும் வர்த்தக சங்கங்கள் என்பன தமது பூண ஆதரவை வழங்குவதாக அறிவித்திருந்தன.

0 comments:

Post a Comment