Monday, September 17, 2018

இலங்கைக் காட்டுக்குள் 1000 இளைஞர் - யுவதிகள் நிர்வாணமாக: அதிரவைக்கும் தகவல்


18.09.2018

சீகிரியா, பஹத்கம காட்டுக்குள் நடத்தப்பட்ட பாரிய ஆபாசக் களியாட்ட வைபவம் ஒன்று பொலிஸாரால் சுற்றிவைளக்கப்பட்டுள்ளது.

இதன்போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட உள்ளூர் மற்றும் வெளிநாட்டு யுவதிகள் நிர்வாணமாக இருந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

சீகரிய பஹத்கமவில் காணப்படும் அடர்ந்த காட்டுப் பகுதிகள் 'டீப் ஜன்கல் பெஸ்டிவல் ஸ்ரீலங்கா 'Deep Jungle Festival sri lanka ' என்ற பெயரில் 3 நாட்களை கொண்ட ஆபாச களியாட்ட நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வுக்கான அனைத்து வசதிகளும் மிகவும் நுட்பமான முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நவீன வசதியிலான மலசலகூட வசதிகள், குடி நீர் வசதிகள், படுக்கை அறைகள், ஜெனரேட்டர்கள் மற்றும் பல்வேறு வகையான உணவுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

குறித்த விருந்தில் பங்கேற்கும் நபர் ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபா வீதம் மூன்று நாட்களுக்கு 90 ஆயிரம் ரூபா அறவிடப்பட்டுள்ளது.

இந் நிகழ்வுக்கான டிக்கெட்டுகள் இணையத்தளம் மற்றும் குறித்த நிகழ்வு இடம்பெற்ற இடங்களிலும் விநியோகிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தை அறிந்து அதிகாலை ஒரு மணிக்கு சென்ற பொலிஸார் குறித்த இடத்தை சுற்றி வளைத்துள்ளனர்.

இதன்போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டு, உள்நாட்டு இளைஞர் யுவதிகள் நிர்வாணத்துடன் காணப்பட்டுள்ளனர்.

மேலும் 300 க்கும் அதிகமான மதுபான போத்தல்களும், 1500 பியர் டின்களும் பெருந்தொகையான ஆணுறைகள், கருத்தடை மாத்திரைகளும் இதன்போது மீட்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

0 comments:

Post a Comment