August 27, 2018
தனது சகோதரருக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் அரசியல் தொடர்பில் எந்தவொரு விடயமும் கலந்துரையாடப்பட வில்லையென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நீண்ட காலமாக அறிமுகமானவர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி எனது சகோதரருக்கு இறுதி அஞ்சலி செலுத்த வருகை தந்திருப்பார் எனவும் அவருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அரசியல் தொடர்பில் எதனையும் பேச வில்லையெனவும் மஹிந்த ராஜபக்ஷ எம்.பி. குறிப்பிட்டுள்ளார்.
நேற்று(26) நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment