26.08.2018
சட்டவிரோதமாகத் தங்கியிருந்த இலங்கைப் பிரஜைகள் 1,818 பேர் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படவுள்ளனர்.
பொதுமன்னிப்பு காலப்பகுதில், ஐக்கிய அரபு இராச்சியத்தில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த இலங்கைப் பிரஜைகளே இவ்வாறு திருப்பி அனுப்பப்படவுள்ளனர்.
சட்டவிரோதமாக நாட்டில் தங்கியுள்ள பிரஜைகள் நாடு திரும்புவதற்காக ஐக்கிய அரபு இராச்சியத்தினால் இம்மாதம் முதலாம் திகதி முதல் 3 மாத காலத்திற்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே, அந்நாட்டில் தங்கியுள்ள இலங்கைப் பிரஜைகள் நாடு திரும்புவதற்குத் தயாராகியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
விசா இன்றி நாட்டில் தங்கியுள்ள இலங்கை பிரஜைகள், அபுதாபியிலுள்ள தூதுவராலயத்தில் அல்லது துபாயிலுள்ள கொன்சியூலர் அலுவலகத்திற்கு சென்று தற்காலிக கடவுச்சீட்டை பெற்றுக் கொள்ள முடியும் என பணியகம் தெரிவித்துள்ளது.
சுமார் 1,25,000 இலங்கை பிரஜைகள் ஐக்கிய அரபு இராச்சியத்தில் பணிபுரிந்து வருகின்றது.
அத்துடன் வருடாந்தம் சுமார் 30,000 பேர் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு பணிக்காக செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment