Sunday, August 26, 2018

சட்டவிரோத மின்சார இணைப்பு – 11 கோடி அபராதம்

26.08.2018

கடந்த வருடத்தில் சட்டவிரோதமாக மின்சார இணைப்பை பெற்றுக்கொண்ட நபர்களிடமிருந்து அபராத தொகையாக 11 கோடிக்கும் அதிகமான பணம் அறவிடப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

சட்டவிரோத மின் இணைப்பு தொடர்பில் 2 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாக அந்த அமைச்சின் ஊடகப்பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத மின்சார இணைப்பு தொடர்பில் தகவல் அறிந்தால் மின்சார சபையின் விசேட விசாரணை பிரிவின் 0112 422 259 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அறிவிக்க முடியும்.

0 comments:

Post a Comment