August 29, 2018
முஸ்லிம் பெண் ஒருவர் போன்று முகத்தை மூடி ஆடை அணிந்து கொண்டிருந்த ஆண் ஒருவர் வெலிக்கடை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெலிக்கடை பொதுச் சந்தைத் தொகுதிக்கு அருகில் இருக்கையிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முச்சக்கர வண்டியில் வந்த குறித்த நபர் தொடர்பில் ஏற்பட்ட சந்தேகத்தினால், முச்சக்கரவண்டி சாரதி வழங்கிய தகவலையடுத்து பொலிஸார் அவரைப் பரிசோதனை மேற்கொண்ட போதே இது தெரியவந்துள்ளது.
எந்த நடவடிக்கைக்காக இவ்வாறு குறித்த நபர் செயற்பட்டார் என்பது தொடர்பில் இதுவரை அறியப்படாதுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
வெலிக்கடை பொலிஸார் இவர் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.
0 comments:
Post a Comment