Wednesday, August 29, 2018

நியமனங்களை பெற்று வேலைக்கு சமூகமளிக்காத நபர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

29.08.2018

புதிய நியமனங்களை பெற்ற பட்டதாரிகள் எதிர்வரும் இரு தினங்களில் சேவைக்கு சமூகமளிக்காவிடின் அவர்களின் நியமனம் ரத்துச் செய்யப்படும் என தேசிய கொள்கை மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த தினத்தில் அரச சேவைக்கு நியமனம் பெற்ற 4100 பேரில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் இதுவரை சேவைக்கு சமூகமளிக்கவில்லை என அதன் மேலதிக செயலாளர் அசங்க தயாரத்ன எனது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் , கடந்த தினங்களில் தமக்கான நியமனங்களை உடனடியாக வழங்குமாறு கோரி பட்டதாரிகள் சங்கங்கள் பல ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment