27.08.2018
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் புனர்வாளிக்கப்பட்ட முன்னாள் போராளி ஒருவருக்கு அமைச்சர் மனோ கணேசன் இன்று சட்டப்பூர்வமாக திருமணம் செய்து வைத்துள்ளார்.
தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சின் நடமாடும் சேவை இன்று முல்லைத்தீவில் இடம்பெற்றது.
இதன்போதே புனர்வாளிக்கப்பட்ட உயரமான முன்னாள் போராளி ஒருவருக்கு அமைச்சர் மனோ கணேசன் சட்டப்பூர்வமாக திருமணம் செய்து வைத்துள்ளார்.
அவர் தனது மனைவியுடன் வாழ்ந்து வந்த நிலையிலேயே, இன்று சட்டப்பூர்வமாக திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், புனர்வாளிக்கப்பட்ட உயரமான முன்னாள் போராளியுடன் எடுத்துக்கொண்ட ஒளிப்படம் ஒன்றினையும் அமைச்சர் மனோ கணேசன் தமது உத்தியோகப்பூர்வ முகப்புத்தகம் ஊடாக பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment