Saturday, August 25, 2018

சின்னஞ்சிறு சிறுவனை அடித்தே கொன்ற பிக்கு! அதிரவைக்கும் பின்னனி

25-08.2018

தாய்லாந்து பாங்காங் அருகே பிரார்த்தனையில் இடையூறு செய்த குற்றச்சாட்டில், 9 வயது சிறுவனை புத்த பிக்கு அடித்து கொன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தாய்லாந்தில் பாங்காங் அருகே காஞ்சனாபுரியில் புத்தபிட்சு மடம் உள்ளது. இங்கு இளம் புத்தபிக்குகள் பயிற்சி மையம் உள்ளது.

இங்கு வாரத்தின் கடைசி வெள்ளிக்கிழமை பிரார்த்தனை நடந்தது. சுபாசை சுதியானோ (64) என்ற புத்த பிக்கு பிரார்த்தனை நடத்தினார்.

அப்போது அங்கு பயிற்சி பெற்று வந்த 9 வயதுச் சிறுவன் வட்டானா போல் சிசாவத் இடையே விளையாடிக் கொண்டு குறும்பு செய்தான். இது பிரார்த்தனைக்கு இடையூறாக இருந்தது.

இதனால் ஆத்திரம் அடைந்த புத்தபிக்கு சுபாசை சுதியானோ பிரார்த்தனை முடிந்ததும் சிறுவன் வாட்டானா போலை அழைத்து மூங்கில் குச்சியால் சரமாரியாக அடித்து உதைத்தார்.

அதன் பின்னரும் அவரது கோபம் தீரவில்லை. சிறுவனை முதுகில் பல முறை எட்டி உதைத்தார். அங்கிருந்த தூணில் தலையை மோதவைத்தார். அதனால் ‘கோமா’ நிலைக்கு சென்ற சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தான் என்று ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

JVPNews

0 comments:

Post a Comment