August 31, 2018
இலங்கை போக்குவரத்துச் சேவை ஊழியர்களின் சம்பளத்தை விரைவில் அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதாக போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
இ.போ.சபையை இலாபம் உழைக்கும் நிறுவனமாக கொண்டுவர உழைத்தவர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும் எனவும், இதற்கான பிரேரணையை விரைவில் அமைச்சரவைக்கு கொண்டுவரவுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
இதற்கு மேலதிகமாக, வருட இறுதியில் ஊழியர்களுக்கு 10 ஆயிரம் ரூபா போனஸ் வழங்கவும் அமைச்சு கவனம் செலுத்தி வருகின்றது.
இ.போ.சபையில் தற்பொழுது 30463 ஊழியர்கள் உள்ளனர். இதன் ஒருநாள் வருமானம் 100 மில்லியன் ரூபாய் எனவும் அமைச்சர் கூறியுள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு இதன் வருமானம் 1618 மில்லியன் ரூபா எனவும், இந்த தொகை 2018 ஆம் ஆண்டு 2000 மில்லியனாக அதிகரித்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இ.போ.சபையிடம் தற்பொழுது 6100 பஸ்கள் காணப்படுவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்
0 comments:
Post a Comment