Monday, August 27, 2018

சிறுவனிடம் சில்மிசம் - தலைமறைவான பௌத்த பிக்கு


27.08.2018

சிறுவன் ஒருவரை பாலியல் வன்முறைக்குட்படுத்திய பௌத்த மத பிக்கு ஒருவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இவர் ஒரு இலட்சம் ரூபாய் சரீர பிணையில் பதுளை நீதிமன்ற நீதவான் ஆர் எம் எஸ் நயந்த சமரதுங்கவினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அத்துருகிய பகுதியில் பௌத்த விகாரைக்கு வருகை தந்த சிறுவனை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தியதன் பின்னர் தலைமறைவாகினார்..

இந்நிலையில் பெற்றோர் மேற்கொண்ட முறைப்பாட்டிற்கு அமைய, குறித்த மத பிக்கு சொரணாதொட்ட பகுதியில் பதுங்கியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட குறித்த நபர் நேற்றைய தினம் நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்ட போதே பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதோடு எதிர்வரும் 14 ஆம் திகதி மீண்டும் நீதிமன்றில் முன்னிலையாகவேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment