Friday, August 31, 2018

ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமர் விடுத்துள்ள அறிவுறுத்தல்


01.09.2018

அடுத்து இடம்பெறவுள்ள நாடாளுமன்ற அமர்வுகளில் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கட்டயமாக பங்கேற்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், எதிர்வரும் 3 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்திலும் அனைத்து உறுப்பினர்களும் பங்கேற்க வேண்டும் என பிரதமர் அறிவுறுத்தி உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் நவம்பர் மாதம், 2019ஆம் ஆண்டுக்கான பாதீடு நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு உட்படுத்தப்பட உள்ளது.

குறித்த காலப்பகுதியில், அரசாங்கம் பல முக்கிய பிரேரணைகளை நாடாளுமன்றில் நிறைவேற்ற தீர்மானித்திருப்பதால், ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்கேற்பு கட்டாயமானது என பிரதமரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, குறித்த காலப்பகுதியில் நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பதை தடுக்கும் வகையிலான நிகழ்வுகளை கலந்துகொள்வதைத் தவிர்க்குமாறும் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமரால் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

0 comments:

Post a Comment