Saturday, August 25, 2018

ஒன்றிணைந்த எதிரணி! 5 ஜனாதிபதி வேட்பாளர்களில் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் யார்?



25.08.2018

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஒன்றிணைந்த எதிரணி அடுத்த தேர்தலை இலக்கு வைத்து 5 ஜனாதிபதி வேட்பாளர்களை தெரிவு செய்துள்ளது.

இதில் ஒருவர்இ மஹிந்த ராஜபக்ஷவினால் தேர்வு செய்யப்பட்டு, அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார் என, பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் சிங்கள பத்திரிக்கை ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் கூட்டு எதிராணியானது, கோட்டபாய ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ, சமல் ராஜபக்ஷ, தினேஷ் குணவர்தன மற்றும் குமார வெல்கம ஆகியோரின் பெயர் பரிந்துரைத்துள்ளது.

இவ்வாறு பரிந்துரைக்கப்பட்டவர்களில் இருந்து ஒருவரை நேரம் வரும் போதுஇ முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவிப்பார் என்றும் அவர் கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment