Saturday, August 25, 2018

நாட்டின் பல பகுதிகளுக்கு மழையுடன் கூடிய காலநிலை- வளிமண்டலவியல் திணைக்களம்

August 25, 2018

நாட்டின் சில பகுதிகளுக்கு கடுமையான மழையும், ஏனைய பகுதிகளுக்கு சிறிதளவு மழையும் பெய்யும் சாத்தியக் கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஊவா, கிழக்கு, வடமத்திய மற்றும் வடக்கு மாகாணங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
சப்ரகமுவ, மேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

0 comments:

Post a Comment