29.08.2018
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட கடூழிய சிறைத்தண்டனை தொடர்பில், உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு தாக்கல் செய்வதற்கு அனுமதி பெறுவதா? இல்லையா? என்பது குறித்த நாளை மறுதினம் ஆராயப்படவுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று இதனை அறிவித்தது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் ப்ரீத்தி பத்மன் சூரசேன மற்றும் அர்ஜூன ஒபேசேகர ஆகிய நீதியரசர் குழாம் முன்னிலையில், ஞானசார தேரரின் சார்பான சட்டத்தரணிகள் தமது வாதத்தை முன்வைத்தபோதே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டது.
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கடந்த தினம் மேன்முறையீட்டு நீதிமன்றம் 6 மாத கடூழிய சிறைத் தண்டனையை விதித்தமை குறிப்பிடத்தக்கது
0 comments:
Post a Comment