Tuesday, August 28, 2018

இளைஞருடன் காதல்..! 46 வயது தாதியரின் உயிர் பறிபோன சோகம்!!

28.08.2018

குருநாகல் பகுதியில் தகாத உறவினை வைத்திருந்த பெண் தாதியர் ஒருவர் இரும்பு கம்பியால் தாக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

திருமணமாகிய 46 வயதுடைய குருநாகல் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதியர் ஒருவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் 29 வயதுடைய இளைஞர் ஒருவருடன் காதல் கொண்டு அவருடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் இருவருக்கும் இடையில் தினமும் வாய்தர்க்கம் ஏற்படுவது வழக்கமாகும்.

ஆனால் நேற்று முன்தினம் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்தர்க்கம் தகராற்றில் நிறைவடைந்தது.

அதிகம் கோபமுற்ற குறித்த நபர் இரும்பு குழாய் ஒன்றினை கொண்டு குறித்த தாதிய பெண்ணை தாக்கியுள்ளார்.

தாக்குதலில் பலத்த காயமடைந்த தாதிய பெண் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றறி உயிரிழந்தஜள்ளார்.

0 comments:

Post a Comment