August 26, 2018
மக்கா ஹரம் ஷரீப் மாடியிலிருந்து குதித்து ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஹஜ் நேற்றோடு நிறைவடைந்த நிலையில் வெள்ளிக் கிழமை காலை ஒருவர் மக்கா ஹரம் ஷரீப் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.இதன் போது பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த இருவர் காயம் அடைந்துள்ளனர்.அவர்கள் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்கொலை செய்து கொண்டவர் அரபு நாடு ஒன்றை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
இதே போன்ற ஒரு சம்பவம் கடந்த ஜூன் மாதமும் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது .
0 comments:
Post a Comment