Friday, August 31, 2018

அரசாங்கத்திலிருந்து விலக ஸ்ரீ ல.சு.கட்சிக்கு கால அவகாசம்- டிலான் எம்.பி.

August 31, 2018

அரசாங்கத்துக்குள் இருக்கும் ஸ்ரீ ல.சு.கட்சி உறுப்பினர்கள் கட்சியின் வருடாந்த கூட்டத்துக்கு முன்னர் தேசிய அரசாங்கத்திலிருந்து வெளியேறாது போனால், 15பேர் கொண்ட குழு ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிரானவர்களுடன் இணைந்து ஸ்ரீ ல.சு.க.யின் அதிகாரத்தைக் கைப்பற்றவுள்ளதாக பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

கட்சியின் புனரமைப்பு நடவடிக்கையின் போது ஸ்ரீ ல.சு.க. அவசியம் அரசாங்கத்திலிருந்து வெளியேற வேண்டும். தற்பொழுதும், பிரேரணையொன்றாக இந்த விடயம் மத்திய செயற்குழுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

நேற்று (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.  

Daily Ceylon

0 comments:

Post a Comment