Sunday, August 26, 2018

கொழும்பில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட பெண் யார்? வெளியாகிய புதிய தகவல்

27.08.2018

கொழும்பு மாளிகாவத்தையில் நேற்று மாலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.

பாதாள உலக குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பாதாள குழு உறுப்பினர் கஞ்சிபானி இம்ரான் என்பவரின் முதல் மனைவியே கொலை செய்யப்பட்டுள்ளார் என கண்டறியப்பட்டுள்ளது.

கஞ்சிபானி இம்ரான், பாதாள தலைவர் மாகதுரே மதுஷ் என்பவருக்கு நெருக்கமானவர் எனவும், அவர் தற்போது டுபாயில் வாழ்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

6 மீற்றர் துப்பாக்கியை பயன்படுத்தி இந்த கொலை செய்யப்பட்டுள்ளது..

கொலை சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

TamilWin

0 comments:

Post a Comment