25-08.2018
நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படுவதற்கான தீர்மானம் ஒன்றை மேற்கொள்வதற்காக ஒன்றிணைந்த எதிரக்கட்சியினால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை எதிர்வரும் வாரத்தில் வெளியிடப்படவுள்ளது.
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ள ஒன்றிணைந்த எதிரணியின் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த அறிக்கை வெளியிடப்படவுள்ளது.
இந்த அறிக்கையின் பிரகாரம் சுயாதீனமாக செயற்படுவது குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாக ஒன்றிணைந்த எதிரணியின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.
இந்த குழு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தவிசாளர் ஜீஎல் பீரிஸ் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment