Friday, August 31, 2018

ஞானசார தேரரின் மேன்முறையீட்டு மனு நிராகரிப்பு

August 31, 2018

பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சார்பில் முன்வைக்கப்பட்ட மேன்முறையீட்டு மனு இன்று (31) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டது.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் தேரர் குற்றவாளி என முன்னர் வழங்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக இந்த மனு முன்வைக்கப்பட்டிருந்தது.
கலகொட அத்தே ஞானசார தேரருக்கு இரண்டு குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment