Saturday, August 25, 2018

அதிவேக வீதியில் 3 ஆயிரத்து 82 கோடி ரூபா வருமானம்


25.08.2018

அதிவேக வீதியில் கடந்த ஜூலை மாதம் வரை 3 ஆயிரத்து 82 கோடி ரூபா வரை வருமானம் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிவேக வீதியின் செயல்பாட்டு பிரிவு அதிகாரி எம் ஒபநாயக இதனை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பாடசாலை விடுமுறை காலப்பகுதியில் ஒரு லட்சம் வரையிலான வாகனங்கள் அதிவேக வீதியினை பயன்படுத்தியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை , தற்போது கடவத்தை, பின்னதுவ, கொடகம ஆகிய அதிவேக வீதியில் நுழைவாயில் மற்றும் வெளியேறும் பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment