Monday, August 20, 2018

தூக்கில் தொங்கிய இளைஞர்! சடலமாக மீட்கப்பட்ட முதியவர்!! வவுனியாவில் சோகம்

20.08.2018

வவுனியாவில் இன்றைய தினம் இரண்டு பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

வவுனியா - கோவில்குளம் பகுதியில் நேற்றிரவு தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞரொருவர் மீட்கப்பட்டுள்ளார்.

பின்னர் அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எவ்வாறாயினும் , அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் முன்னரே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் கோவில்குளத்தை சேர்ந்த க.கதிர்செல்வன் என்ற 30 வயதுடைய இளைஞரே மரணமடைந்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.

நேற்றிரவு 12 மணியளவில் தனது அறையினுள் சென்று போர்வையை பயன்படுத்தி குறித்த இளைஞர் இவ்வாறு சுறுக்கிட்டுத் தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக காவற்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதேவேளை , வவுனியா கடைவீதியில் உள்ள தனியார் விடுதியொன்றில் இருந்து 61 வயது முதியவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை 3.30 மணியளவில் குறித்த விடுதியில் வாடகைக்கு அறையொன்றை பெற்று தங்கிய குறித்த முதியவர் காலை 10 மணியாகியும் வௌியே வராததால் , விடுதி ஊழியர்கள் அறையை திறந்து பார்த்துள்ளனர்.

இதன்போது , அவர் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ள நிலையில் , சம்பவம் தொடர்பில் காவற்துறைக்கு அறியப்படுத்தியுள்ளனர்.

குறித்த இரு சம்பவங்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா காவற்துறையினர் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

0 comments:

Post a Comment