16.09.2018
மொனராகலை பகுதியில் 18 வயதான மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறை அவசர அழைப்பு பிரிவிற்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் இந்த ஆசிரியர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
பின்னர் அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட வேளை, நாளை மறுதினம் வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கு முன்னரும் மொனராகலை பகுதியில் மாணவியொருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி ஆசியர் ஒருவர் அண்மையில் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment