16.09.2018
இறக்காமத்தைச் சேர்ந்த சிரேஷ்ட சட்டத்தரணியும், பிரசித்த நொத்தாரிசும், சத்தியப் பிரமாண ஆணையாளருமான பாறூக்சாஹிப் நீதி மற்றும் மனித உரிமைகளுக்கான சமாதான நிதவான்கள் கவுன்சிலின் கிழக்கு மாகாணப் பணிப்பாளராக கவுன்சிலின் தலைவர் பஹத் ஏ மஜித் அவர்களால் இன்று 16 நியமிக்கப்பட்டுள்ளார்.
தேசிய ரீதியில் பல்வேறுபட்ட சமூக நல அமைப்புக்களில் முக்கியஸ்தராக இருந்து வரும் சட்டத்தரணி பாறூக்சாஹிப் தேசிய சமாதானப் பேரவையின் அம்பாரை மாவட்ட குழு உறுப்பினராகவும், மாயக்கல்லி மலைக் காணி விவகார செயற்பாட்டுக் குழுவின் செயலாளராகவும், பிரபல முகநூல் Asraf Tv யின் நிறுவுனரும் தவிசாளரும், இறக்காமம் பட்டினப் பள்ளிவாசல் முன்னாள் பொருளாளருமாவார்.
விஞ்ஞானப் பட்டதாரியான இவர் தேசிய சமூக அபிவிருத்தி நிறுவகத்தில் சமூகப் பணிக்கான டிப்ளோமா, தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் உளவளத்துணை டிப்ளோமா, போன்றவற்றைக் கற்றுத் தேர்ந்த பின்னர் சமூகப் பணிகளிலும் சமூகப் பிரச்சினைகளிலும் மிகவும் ஆர்வத்துடன் ஈடுபட்டு வந்ததன் காரணமாக இப் பதவிக்கு விசேடமாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
0 comments:
Post a Comment