14.09.2018
நேற்று இடம்பெற்ற அம்பாறை அபிவிருத்தி குழு கூட்டத்தில் மு.காவின் பாராளுமன்ற உறுப்பினர்களான பைசால் காசீம் மற்றும் மன்சூர் ஆகியோருக்கிடையில் பிரச்சினை தோன்றியிருந்தது. இது கடுமையாக உழைக்கும் தொழில் என்பதை பலரும் அறிவதில்லை.
சில வருடங்களாக இந்த பிரச்சினை நிலவியே வருகிறது.
அனைவருடைய மண் அனுமதிப்பத்திரங்களையும் இல்லாமல் செய்து, அவர்களுக்கு நன்கு தெரிந்த ஒரிருவருக்கு குறித்த அனுமதிப்பத்திரத்தை எடுத்துகொடுப்பது. அதன் மூலம் நன்கு தங்களது வயிற்றை நிரப்பிக்கொள்வது.
சில வருடங்களுக்கு முன் இந்த பிரச்சினையில் ஈடுபட்ட ஒரு எம்.பியின் பிரத்தியேக செயலாளரின் தம்பிக்கு குறித்த அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டிருந்தது. மண் வேண்டும் என்றால் அவரை மாத்திரமே நாடியாக வேண்டும் என்ற நிலை இருந்தது. விலையும் குதிரை விலை. இப்போது அவற்றுக்கான காரணம் புரிகின்றதல்லவா?
சமூக பிரச்சினை பற்றி பேச வேண்டிய இடத்தில் சொந்த பிரச்சினைக்காக அடிபிடி. எமது சமூகம் எவ்வாறு உருப்படும்?
நியாஸ்,
சம்மாந்துறை.
தூய்மை1st
0 comments:
Post a Comment