Thursday, September 13, 2018

எரிபொருள் விலை சூத்திரம் தொடர்பில் விரைவில் தீர்மானம் - ஜனாதிபதி

14.09.2018

எரிபொருள் விலை நிர்ணய சூத்திரத்தை தொடர்வதா என்பது குறித்து தீர்மானிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஊடக பிரதானிகளுடன் தற்போது இடம்பெற்று வரும் சந்திப்பிலேயே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் விலை நிர்ணய சூத்திரத்தில் ஏற்பட்டுள்ள குளறுபடியை அடுத்தே, தான் இந்த தீர்மானத்தை எட்டியுள்ளதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
அத்துடன், நாட்டின் தேசிய பாதுகாப்பு எந்த வகையிலும் வலுவிழக்கவில்லை எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், தன்மீதான கொலை அச்சுறுத்தல் தொடர்பில் வெளியான தகவலை அடுத்து, விசேட காவல்துறை பிரிவு விசாரணைகளை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூருடனான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பில் ஆராயும் குழு அறிக்கை சமர்ப்பித்த பின்னர், உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment