Tuesday, September 18, 2018

வ‌வுனியா வைத்திய‌சாலையின் அகோர‌ காட்சி!! நிரம்பி வழியும் நோயாளர்கள்..

.19.09.2018

வவுனியாவிலுள்ள வைத்தியசாலைக்கு வரும் நோயாளிகளுக்கு படுக்கை அறை இல்லாமல் அனைத்து நோயாளிகளும் நிலத்தில் அமர்ந்து இருப்பதை கண்டு கொந்தளித்த இளைஞன் அதை புகைப்படம் எடுத்து சமுக வலைதளங்களில் பதிவு செய்துள்ளார்.

மேலும் இதைப் பற்றி குறித்த இளைஞன் கூறுகையில்,

வ‌வுனியா வைத்திய‌சாலை கொடூர‌ம் இது இங்கு நில‌த்தில் கிட‌ப்ப‌து உயிர்க‌ளே! இதில் ஒரு பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர் இல்லை அவ‌ரின் பிள்ளைக‌ளும் இல்லை சாதாரண‌ ஏழைக‌ளே! பாராளும‌ன்றில் பேசும் உறுப்பின‌ர் யாராவ‌து வ‌வுனியா வைத்திய‌சாலை ப‌க்க‌ம் வாருங்க‌ள்.

வாக்க‌ளித்த‌ன் ஏழை என்ப‌தால் தானோ என்னவோ? வாக்கு வாங்கிய‌வன் ம‌க்க‌ள் மீது இர‌க்க‌ம் இல்லாமல் இருக்கிறான், என்றும் வைத்திய‌ அதிகாரி ம‌ற்றும் பாராளும‌ன்ற‌ வியாபாரிக‌ளின் க‌வ‌ன‌த்திற்கு! எனவும் பதிவிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment