Sunday, September 9, 2018

ராஜீவ் காந்தி கொலை வழக்கு -7 பேரை விடுவிப்பது தொடர்பில் தமிழக அரசு எடுத்துள்ள தீர்மானம்

09.09.2018

இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை தொடர்பில் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரை விடுவிப்பது குறித்து ஆளுநருக்கு பரிந்துரைக்க தமிழக அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி தலைமையிலான அமைச்சரவை கூட்டம் இன்று மாலை நடைப்பெற்றது.

ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட வழக்கில் 27 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யும் முடிவு தொடர்பிலேயே இந்த கூட்டம் இடம்பெற்றது.

குறித்த ஏழு பேரையும் விடுவிக்கும் அதிகாரம், தமிழக ஆளுநருக்கு உள்ளது என, இந்திய உயர் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது.

இந்தநிலையில், இந்த அமைச்சரவைக் கூட்டத்தி எடுக்கப்பட்ட தீர்மானம் தமிழக ஆளுனருக்கு ஆவனங்கள் மூலம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும், தமிழக தகவல்கள் தெரிவித்துள்ளன.

0 comments:

Post a Comment