Wednesday, September 12, 2018

பேருந்து விபத்து - குழந்தைகள் உட்பட 60 பேர் பலி

September 13, 2018

தெலுங்கானா மாநிலம் கொண்டாகட்டு மலைப் பகுதியில் பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்ததால், மலைப் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்தது.

இதை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பொலிஸார் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக செயல்பட்டனர். இந்த விபத்தில் 7 குழந்தைகள் உள்பட 52 பேர் வரை இறந்ததாக முதல்கட்ட தகவல் வெளியானது.

இந்த விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ள 5 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதைஅடுத்து, பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 57 ஆக அதிகரித்தது.

இந்நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த 3 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதைத்தொடர்ந்து, பேருந்து விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்தது.

இதற்கிடையே, பேருந்து விபத்தை ஏற்படுத்திய ஓட்டுனர் சீனிவாசராவ் சென்ற வாரம் சிறந்த ஓட்டுனர் விருது வாங்கியவர் என்பது தெரிய வந்துள்ளது.

0 comments:

Post a Comment